Friday, May 30, 2008

வாழ்த்தலாம் வாங்க...

ஹாய் படிஸ், அதாவது நம்ம கில்ஸ் வித் கில்ஸ் க்கு
நாளைக்கு அவதாரத் திருநாளாம். பற்கள் பசையா இல்ல
பற்பசையா னு கேள்வி கேட்ட பொடியனையே
சமாளிச்சவரும், பஸ்ஸுல ஜன்னல் சீட்டுக்கு பக்கதுல
இருக்குறவர சிந்திக்க வச்சவரும் ஆன பெரிய்ய மகான்.
அவருடைய அவதாரத் திருநாளை நாம பெருசா
கொண்டாடலைன்னாலும் அட்லீஸ்டு ஒரு கேக்காவது
வெட்டி கொண்டாடனும் இது நம்ம தலைவியோட
ஆர்டர் இல்லியா, அது தான் இந்த கேக்.எல்லாரும்
வாழ்த்து சொல்லிட்டு அப்படியே ஒரு பீஸூ
எடுத்துட்டு (ஒரு பீஸு மட்டும் தான்) போகலாம்.
இது வாழ்த்து சொல்றவங்களுக்கு மட்டும் தான் மக்கா ....


மேல பாருங்க சும்மா எப்படி ஜொல்லு விடராருன்னு......
வாங்க வந்து வாழ்த்திட்டு போங்க.

Wednesday, May 28, 2008

காக்கா

அது ஒரு பெரிய ஹோட்டலின் ஆடம்பரமான அறை. மது பாட்டில்களும் மிச்சர் பாக்கெட்களும் சிதறி கிடக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக அங்கே ஆட்கள் கூட ஆரம்பிக்கிறார்கள். அங்கே வந்த பிரபலங்கள் தமிழ்நாட்டில் உள்ள பெரிய தலைகள். 'இளைய மாலுமி' சுஜய், பிரபல வில்லன் நடிகர் வீமன், காமெடி நடிகர் கிவெக், கவர்ச்சி கண்ணி ப்ரிஷா மற்றும் மசாலா பட இயக்குனர் ஜரணி. எல்லோரும் ஒரு புதிய படத்தின் கதை விவாதத்துக்காக அங்கே வந்திருந்தனர். படத்தின் தயாரிப்பாளர் அஸ்தமநிதி அப்பொழுது தான் உள்ளே நுழைந்தார். தமிழகத்தின் மூத்த தலைவரின் பேரன் அவர். பார்க்க பள்ளி மாணவர் போல் இருந்தார்.

அஸ்தமநிதி : "என்ன ஜரணி ஸார்? எல்லாரும் வந்தாச்சா?"
ஜரணி: "எல்லாம் ரெடி ஸார். சுஜய் வந்தாச்சு. ஆரம்பிக்கலாமா?"
அச் : "தாத்தா கிட்ட ஒரு வாட்டி சொல்லிடவா?"
ஜரணி : (முணுமுணுப்பு)"இவன் வேற. சுச்சு போகணும்னா கூட தாத்தாவ கேக்கவா பாட்டிய கேக்கவா னு இம்சை பண்றான்" (சத்தமாக)"அதுக்கு என்ன ஸார். பெரியவங்க ஆசீர்வாதம் தானே முக்கியம்"
சுஜய் : "ன்னா. எல்லாரையும் வர சொல்லிட்டீங்க. கதைய சொன்னீங்கன்னா நாங்க கேட்டுட்டு கெளம்புவோம்"
ஜரணி : "அது தான் ஸார். நாம போன படம் 'பில்லி' எல்லாம் கலெக்ஷனையும் உடைச்சுது. இந்த தடவை அதையும் தாண்டி போகணும்"
சுஜய் : "என்ன வழக்கம் போல மகேஷ் பாபு படம் ரீமேக் தானே."

ஜரணி : "இல்ல ஸார். அது தான் உங்களுக்கு போட்டியா இந்த 'பயம்' ரவி எல்லா படமும் வாங்கி தொலையறானே"
சுஜய் : "ஆமா. இதுல வேற இந்த சுஜித்குமார் படமும் ஓடிடுச்சு. அதனாலயே நம்ம படம் ஓடியே ஆகணும்."
கிவெக் : (முணுமுணுப்பு)"ஓடுதே. ஆனா தியேட்டர் விட்டு பயங்கர வேகமா ஓடுது."
ஜரணி : "இந்த தடவை நானே சொந்தமா யோசிச்சு ஒரு கதை சொல்ல போறேன்"
சுஜய் : (பயந்தவாறே)"ஏங்க இந்த விஷப்பரீட்சை எல்லாம். பேசாம அடுத்த மகேஷ் பாபு படம் வர வரைக்கும் காத்திருக்கலாம்.
ஜரணி : "கதை கேட்டீங்கனா நீங்களே ஆடிடுவீங்க"

சுஜய் : போங்க ஸார். இதே வார்த்தை தான் போன படம் "அழகிய திருட்டு மகன்" எடுத்த இயக்குனரும் கதை சொல்லும்போது சொன்னார்.என்ன ஆச்சு"
கிவெக் : "ATM ATM னு சொல்லி கடைசில தயாரிப்பாளரை ATM வாசல்ல பிச்சை எடுக்க விட்டுட்டாங்க"
சுஜய் : "இந்த படம் நல்லா வரணும்ங்க"
ஜரணி : "நீங்க கதைய கேளுங்க ஸார். அப்புறம் மூக்கு மேல விரல் வெப்பீங்க"
கிவெக் : "மூக்கு மேல விரல் வெச்சா பரவாலை. மூக்கு உள்ள விரல் போகற அளவுக்கு மட்டமா இல்லாம இருந்தா சரி"
ஜரணி : "படத்தோட பேரு என்ன னு கேக்க மாட்டீங்களா?"
கிவெக் : "வேணாம்னு சொன்னா விடவா போறீங்க. சொல்லி தொலைங்க"

ஜரணி : "படம் பேரு காக்கா."
கிவெக் : "தயாரிப்பளரை காக்கா பிடிக்கறீங்க னு உறுதி ஆயிடுத்து"
ஜரணி : "நீங்க கதை கேளுங்க அப்புறம் உங்களுக்கு அர்த்தம் புரியும். ஓப்பன் பண்ணினா கடப்பா கிராமம் காட்றோம்."
கிவெக் : "ஏன் ஸார் எப்பவுமே ஆந்திரா பார்டர் பக்கம் ஒதுங்கிடறீங்க?"
ஜரணி : "எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கை தான். இங்கே ஓடலைனாலும் அங்க ஓடிடும்ங்கற நம்பிக்கை தான்."
சுஜய் : "அதெல்லாம் இருக்கட்டும். கதைக்கு வாங்க"
ஜரணி : "ஓப்பன் பண்ணினா கடப்பா கிராமம். புழுதி. அழுக்கு. அங்க உங்க அப்பா வில்லன் வீமன் கிட்ட சவால் விடுறாரு "என் மகன் வருவாண்டா" னு"
சுஜய் : "அப்போ நாம ஒபபனிங் சீனும் சாங்கும் வெச்சுக்கலாமா ன்னா???"

கிவெக் : "ஹ்ம்ம்ம். நடிக்கிறதை தவிர எல்லாத்தையும் கேளு."
ஜரணி : "ஆமாம் ஸார். எல்லாரும் சாக்கடை பக்கம் பாக்கறாங்க. அப்போ நீங்க அந்த சாக்கடையோட மூடிய உடைச்சு வெளில வறீங்க. அரங்கமே வெடிக்குது ஸார்."
கிவெக் : "படம் சாக்கடை னு மறைமுகமா சொல்றோம்."
சுஜய் : "சூப்பர். அப்புறம் சொல்லுங்க ஸார்"
ஜரணி : "அப்புறம் நீங்க சைக்கிள் ரேஸ் ல கலந்துகறீங்க. அப்போ உங்க ஓட்டை சைக்கிள் வீல் கழந்துடுது"
சுஜய் : "ஹயயோ. அப்புறம்?"
ஜரணி : "நீங்க சைக்கிளை தோள் மேல போட்டுட்டு ஓடறீங்க. அப்புறம் கடைசில சைக்கிளோட ஒரே டைவ். அப்புறம் என்ன சாங் தான்."
சுஜய் : "சூப்பர். இப்பவே டியூன் போடலாம்."

ஜரணி : "ஓகே ஸார். எங்க பா அந்த புது ஆசிஸ்டெண்ட். போய் மாரியை கூட்டிண்டு வா."
புது ஆசிஸ்டெண்ட் : "யாரு மாரி?"
பழைய ஆசிஸ்டெண்ட் : "யோவ். என்னய்யா மாரியை தெரியாது ங்கற?"
புது ஆசிஸ்டெண்ட்: "ரஹ்மான், ராஜா, யுவன் எல்லாம் கேள்வி பட்டு இருக்கேன். யாரு மாரி?"
பழைய ஆசிஸ்டெண்ட் : "இது சுஜய் ஸார் படம். அவர் படம் நா கண்டிப்பா 5 குத்து பாட்டு இருக்கணும். அது தான் அவர் ரசிகர்களுக்கு பிடிக்கும். (ரகசியமாக)அது மட்டும் இல்ல..இந்த மாதிரி டப்பாங்குத்து பாட்டு போட்டா தான் இந்த மாதிரி மொக்கை படம் பாத்து தூங்கர ஜனங்க எழுந்திருப்பாங்க."
புது ஆசிஸ்டெண்ட்: "அது சரி. மாரி யாரு?"
பழைய ஆசிஸ்டெண்ட் : "மாரி இங்கே சாவுக்கு மேளம் அடிக்கிறவன். அவன் தான் சுஜய் ஸார் படத்துல எல்லாம் தப்பு தாளம் அடிக்கிறவன்."
ஜரணி : "யோவ். போய் சீக்கிரம் அவனை கூட்டிண்டு வாயா. சுட சுட ஒரு 4 டண்டனக்கா டியூன் ரெடீ பண்ணிடலாம்."
சுஜய் : அதுக்கு அப்புறம் கதைய சொல்லுங்க ஸார்.

ஜரணி : ஒபபனிங் சாங்கக்கு அப்புறம் நீங்க உங்க அம்மா கிட்ட பேசகறீங்க. தாய்க்குலம் எல்லாம் கண்ணீர் விட்டு கதறும். அப்புறம் ஒரு ஃபைட் சீனு. அதுல சும்மா பறந்து பறந்து உதைக்கறீங்க. அது மட்டும் இல்ல ஸார். நீங்க ஓடும்போது ஒரு ஆட்டோ குறுக்க வருது ஸார். அத தாண்டி அப்படியெ குதிக்கறீங்க. வில்லன்ணோட ஆட்களை நீங்க அடிச்ச அடி பாத்து அவருக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர் "ஏதோ புயல் ல சிக்கினாரா. இல்ல ஒரு நூறு பேரு இவர அடிசாங்களா" னு கேக்கறாரு
கிவெக் : இதை எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே
ஜரணி : (சுதாரித்து) அட என்ன தம்பி ரொம்ப திங்க் பண்ற?
கிவெக் : அடங்கொக்கா மக்கா. இது பாட்ஷா ல வர வசனம் தானே.
ஜரணி : அட அரசியல் ல இதெல்லாம் சகஜம் பா
சுஜய் : அப்புறம் சொல்லுங்க ன்னா
ஜரணி : அப்புறம் வில்லன் கிட்டேருந்து நீங்க தப்பிக்கும்போது தூரத்துல ஒரு ரயில் வண்டி போகுது. நீங்க ரயில் வண்டிய பாக்கறீங்க வில்லனை பாக்கறீங்க. 3 பேரையும் மாத்தி மாத்தி காட்டி ரசிகர்களை டென்ஷன் பண்றோம். என்னடா பண்ண போறீங்க னு எல்லாரும் யோசிக்கும்போது நீங்க ஒரே டைவ் அடிச்சு அந்த ரயில்வண்டிக்கு பக்கத்துல குதிக்கறீங்க.
கிவெக் : நல்லவேளை இவர் வீட்டு பக்கத்துல ஏர்போர்ட் இல்ல.

ஜரணி : இல்ல...எல்லாம் ஒரு பில்ட் அப் தான்
கிவெக் : டேய் இவன் கதை சொல்லுடா னு சொன்னா நீ எங்க கதை சொல்ற. அரை மணி நேரமா பில்ட் அப் தாண்டா தர. அடிக்கறான் ங்கற, குதிக்கறாங்கர, சாங்கு ங்கற, ஃபைட் ங்கற. உண்மையா சொல்லு....சும்மா பில்ட் அப் வெச்சே பஜனை பண்ணலாம் னு தானே முடிவு பண்ணிட்ட.
ஜரணி : என்ன தம்பி நீங்க. சுஜய் ஸார் ரசிகர்களுக்கு என்ன தேவையோ அதை தான் நான் தரேன். நான் என்னமோ எனக்கு பிடிச்ச மாதிரி எடுக்கிற மாதிரி பேசறீங்க.
சுஜய் : காதல் பத்தி சொல்லவே இல்லையே.
ஜரணி : ஆ. நீங்க மலேசியாக்கு உங்க அப்பா கடன் அடைக்க போகும்போது அங்க நீங்க மாறுவேஷம் போடறீங்க. கண்ணுல கர்‌சீஃப் கட்டிக்கறீங்க.
கிவெக் : கர்‌சீஃப் இல்லாம ஹீரோயின் ஹீரோவை பார்க்கும்போது அவனை அவங்களுக்கு அடயாளமே தெரியாதே.
ஜரணி : எப்படி தம்பி கரெக்டா சொல்றீங்க?
கிவெக் : பெரிய BBC Mastermind கேள்வி. பதிலே கண்டு பிடிக்க முடியாது பாரு. இந்த வீணா போன கண்றாவிய தான் காலம் காலமா செஞ்சு தொலையறீங்க.
ஜரணி : அப்புறம் ஹீரோயினோட பாட்டி யாருன்னா நம்ம ரம்யா கிருஷ்ணன். அவங்க கிட்ட ஒரு வடை சைஸ்ல ஒரு வைரம் இருக்கு. அது ஹீரோ கிட்ட சிக்குது. ஹீரோ அதை சென்னை எடுத்துட்டு வர்றாரு. அவர் கூட ஹீரோயினும் வர்றாங்க. அப்புறம் வில்லன் ஹீரோவ தேடி சென்னை வர, அப்புறம் வில்லன், ஹீரோயினோட முறைமாமனுக்கும் ஹீரோ கிட்ட தகராறு வருது.

சுஜய் : சூப்பர் ன்னா
ஜரணி : அந்த வடை சைஸ் வைரத்தை வெச்சு நீங்க எப்படி பாடு படுத்தறீங்கங்கன்றத பார்த்து அரங்கமே வெடிக்கும். நடு நடுவுல ஒரு குத்து பாட்டு, ஒரு பில்டப், ஒரு பஞ்ச் னு உங்க இமேஜ் ஏத்திரலாம்.
கிவெக் : கதை ல நிறைய கோங்குரா சட்னி வாடை அடிக்குது. ஏமி ரே பாவா? ஹிட் தீஸ்குந்நாவா?
ஜரணி : ஹீ ஹீ. எல்லாம் ஒரு வியாபார தந்திரம் தான். அதுவும் இதுல ஒரு சூப்பர் செண்டிமெண்ட் பிட் எல்லாம் இருக்கு. வில்லன் எந்த கல்லால உங்க அப்பாவை அடிக்கிறாரோ, நீங்க கடைசில அதே கல்லால வில்லனை அடிக்கறீங்க. எப்படி?
கிவெக் : (முணுமுணுப்பு)முதல்ல உங்க ரெண்டு பேரையும் அந்த கல்லால அடிச்சு கொல்லனும். அப்போ தான் தமிழ் சினிமா நிம்மதியா இருக்கும்.

ஜரணி : அப்புறம் தமிழ் சினிமா வழக்கப்படி கடைசில போலீஸ் வர்றாங்க. உங்கள ஜஸ்ட் லைக் தட் ரீலீஸ் பண்றாங்க. நீங்களும் ஹீரோயினும் டூயட் பாடி சுபம் போட்டுடலாம். அந்த வடை சைஸ் வைரம் உங்களுக்கு தான்.
சுஜய் : ஆமா. ஏன் இந்த படத்துக்கு காக்கா னு பேரு வெச்சீங்க???
ரசிகன் : அதை நான் சொல்றேன் ன்னா.
சுஜய் : யாரு இவன்? சரி பரவாயில்ல சொல்லு.
ரசிகன் : நீ காக்கா மாதிரி கண்றாவியா இருக்க. ரம்யா கிருஷ்ணன் ஒரு பாட்டி. அவங்க கிட்ட வடை ஸைஸ் ல ஒரு வைரம். அத நீ திருடற. இது எங்கயோ கேள்வி பட்ட மாதிரி இல்ல?
கிவெக் : அட பாவி. காக்கா பாட்டிகிட்ட வடை சுட்ட கதைய தான் இவ்வளவு பில்ட் அப் கொடுத்து சொன்னியா. எஸ்கேப்.!!!!!!

எல்லோரும் சிதறி ஓடுகிறார்கள்.

எழுதியவர் : ஹரீஷ்

Tuesday, May 27, 2008

SMILE - For a cause

Makkalay..

Let me take the pleasure of introducing..namba fellow blogger (yet-to-be-listed-in-our-union) http://f-e-e-l-i-n-g-s.blogspot.com/ pugazh Nandoo (surukkama anathakrishnan nithyanandan...'a' kum 'n' kum nadula erumbu oorara mathiri ungaluku intha per therinja athku nan porupila)..

I always suspected that many of our gud samaritan blog makkal silenta neria matter senjukitu..velila solama irukannganu..here is one such person in "hiding" all these days..SMILE nu oru NGO (govt registerd) naalu varushama nadathikitu varar.

Atha pathi neria information namma kuda share pannika virupapadarar..ipothaiku oru test blogsite for that org matum than iruku..further details awaited from Nandu.

http://smilewelfarefoundation.blogspot.com/

I just took this oppertunity to give an intro for nandoo to share his thoughts and info abt SMILE to us all..so watch out for this space folks :) more to follow

Friday, May 23, 2008

பிறந்த நாள் வாழ்த்து...

இன்று பிறந்த நாள் கொண்டாடும் பொற்கொடி மற்றும் திருமதி.அம்பி அவர்களுக்கும் யூனியன் சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்...





Wednesday, May 21, 2008

கீதா மேடமுக்கு பிறந்த நாள்

நாளொரு பதிவும், பொழுதொரு பின்னூட்டமும் இட்டவரும், கைலாச யாத்ரை சென்று கைலை நாதனை கதிகலங்க வைத்தவரும், வால்மீகி ராமாயணத்துக்கு தமிழில் பாஷ்யம் எழுதியவரும், ஆச்சார்ய ஹ்ருதயம், முத்தமிழ் குழுமம், நமது பிளாக் யூனியன், மதுரை மாநகர், இன்னும் என்னவேல்லாம் குழு வர இருக்கிறதோ அதில் எல்லாம் துண்டு போட்டு எழுதிவரும்,
டாட்டா இன்டிகாம் காரர்களை பந்தாடியவரும், பதிவுலக காரக்கால் அம்மையார், திருமதி.கீதா சாம்பசிவம் அவர்கள் தனது எழுபதாவது(குறைச்சு சொல்லிருந்தா மன்னிக்கவும்) பிறந்த நாளை இன்று (22/05/2008) கொண்டாடுகிறார்.
(picture: thanks to kaipullai)
உங்களை வாழ்த்த எங்களுக்கு வயதில்லை, வணங்குகிறோம் மேடம்.
உங்களின் தேனீ போன்ற சுறுசுறுப்பும், விடா முயற்சியும், புதிய விஷயங்களை கற்று கொள்ளும் ஆர்வமும் கண்டு பிரமிக்கிறேன். குறைவில்லாத ஆரோக்யத்துடன் நீங்கள் மேலும் மேலும் பல சாதனைகள் செய்ய(ஹிஹி, எனக்கே சிரிப்பா வருது) எல்லாம் வல்ல முருகனை வேண்டி கொள்கிறேன்.

அப்படியே இங்கயும் போய் பாருங்க.

Tuesday, May 20, 2008

நினைவாற்றல் !

இன்னைய தினமலர்ல ஒரு செய்தி வந்திருக்கு:

// எத்தனையோ நாள் முன்பு நடந்ததை உங்களால் நினைவு வைத்துக்கொள்ள முடியுமா? ஒரு வாரம்...ஒரு மாதம்...? 27 ஆண்டாக, ஒவ்வொரு நாளும் நடந்த விஷயங்களை நினைவுகூறுகிறார் ஒரு அதிசய பெண். அமெரிக்காவை சேர்ந்த இந்த பெண் ஜில் பிரைஸ்; வயது 42. "கடந்த மாதம் 14 ம் தேதி எங்கு போனீர்கள்? 28 ம் தேதி என்ன சாப்பிட்டீர்கள்?' என்பது முதல், பல ஆண்டுக்கு முன், சந்தித்த ஒருவரை பற்றி கூட சொல்கிறார்.


கடந்த 27 ஆண்டில் அவர் சம்பந்தப்பட்ட எந்த விஷயம் குறித்தும் சொல்கிறார் இவர். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அசந்து விட்டனர். இவர் குறித்து நிபுணர்கள் கூறியதாவது: ஒருவரால், குறிப்பிட்ட காலம் வரை தான் நினைவாற்றல் மூலம் எந்த விஷயத்தையும் சொல்ல முடியும். ஆனால், ஜில்லுக்கு அளவுக்கு மீறி நினைவாற்றல் இருக்கிறது. இதற்கு காரணம், அவர் மூளையில் உள்ள ஒரு வித அசாத்தியமான சக்தி தான். இது உண்மையில் நல்லதல்ல; ஒரு வகை மனநல வியாதி. இந்த வியாதிக்கு ," ஹைபெர் தைமெஸ்டி' என்றுபெயர்.


கடந்த 1980ம் ஆண்டில் இந்த பெண்ணுக்கு வயது 14. அப்போது தான் இந்த "போபியா' ஆரம்பித்துள்ளது. நல்ல விஷயங்கள் அறிந்து கொள்வதுடன், கெட்ட நினைவுகள் வரும் போது மன அழுத்தம் ஏற்படும். இதனால், இந்த பெண்ணுக்கு தனி சிகிச்சை தேவை.இந்த அளவு அசாத்திய நினைவாற்றல் இருக்கும் நிலையில் திடீரென இது எதிரிடையாகக்கூட மாறலாம்; நினைவாற்றல் மங்கி விடலாம். இவ்வாறு நிபுணர்கள் கூறினர். பள்ளி ஒன்றின் நிர்வாகியாக பணியாற்றும் ஜில் கூறுகையில்,"எனக்கு பழைய நினைவுகள் வருவதால் எந்த பிரச்னையும் இல்லை.


ஆனால், சில மனதுக்கு பிடிக்காத நிகழ்வுகள் பற்றி நினைவு வரும் போது பெரிதும் மனஉளைச்சல் ஏற்படுகிறது. இதனால் மனஅழுத்தம் வந்து பெரும் அவதிப்படுகிறேன். இந்த அசாத்திய நினைவாற்றல் எனக்கு நல்லதை விட, கெட்ட தை தான் தருகிறது' என்றார்.//

இத படிச்சப்ப ஒரு ஜோக் நினைவு வந்தது. கொஞ்சம் சடில்.
------------------

அமெரிக்கால ஒரு ஆசாமி. அவர் வேலை ஊர் ஊரா போய் வியாபாரம் செய்யறது. ஒரு ஊருக்கு போயிருந்தப்ப அங்க இருக்கிற ஒரு செவ்விந்தியரை பத்தி ரொம்ப உயர்வா பேசிக்கிட்டாங்க. அவருக்கு அபாரமான ஞாபக சக்தியாம். பல வருஷங்கள் முன்னால நடந்தத எல்லாம் ஞாபகம் வச்சுகிட்டு இருக்காராம். இப்படி கேள்வி பட்டதும் நம்ம வியாபாரிக்கு ஒரு உந்துதல். செவ்விந்தியரை பாக்கப்போனா ர். அவர் இருக்கிற குன்று ஏறிப்போய் பாத்து பேசினார். செவ்விந்தியருக்கு நிஜமாவே அபார சக்திதான். அங்கிருந்தே ஊரை காட்டி இந்த வீடு இந்த வருஷம் கட்டினது இந்த இடத்தில இன்ன மரம் இருந்தது ன்னு எல்லாம் சொல்ல முடிஞ்சது அவராலே. பல கேள்விகள் கேட்டு டக்கு டக்குன்னு பதில் வரதை பாத்து ஆச்சரியப்பட்டார். செவ்விந்தியர பாராட்டிட்டு "சரி, போய் வரேன்" னு சொல்லிட்டு கிளம்பிட்டார். கடைசியா ஒரு கேள்வி கேக்க தோணிச்சு. "அஞ்சு வருஷம் முன்னே இதே மாசம், இதே தேதி, காலை உணவு என்ன சாப்டீங்க" ன்னு கேட்டார்.

செவ்விந்தியர் சொன்னார், "eggs!"

படு ஆச்சரியத்தோட திரும்பிட்டார் நம்ம ஆளு.


நாலு வருஷம் போச்சு. திருப்பியும் அந்த ஊருக்கு போற வாய்ப்பு வந்தது. செவ்விந்தியர எப்படியும் திரும்ப ஒரு முறை பாத்து ஹலோ சொல்லணும்ன்னு நினச்சுக்கொண்டே போனார். அவர பாத்ததும் செவ்விந்திய மொழில ஹலோ சொல்லாம்னு ,

"how!"

அப்படின்னார். செவ்விந்தியர் நிமிர்ந்து யார்ரான்னு பாத்தார் வியாபாரின்னு தெரிஞ்சது. தயங்காம பதில் சொன்னார்.

"scrambled of course!"

Friday, May 16, 2008

இன்போஸிஸ் ல மொக்க போட ஆளு வேனுமாம்.

Hi,
If you know any of your friends willing to work in Mangalore send in theirresume to rajiv_eswaramoorthy@infosys.com . There is huge vacancy in thenewly opened development center here.Technology does not matter as long as they have engineering background.Do contact me at 09980130031 if you need any information.

Regards,Rajiv.

வணக்கம்!

தும்பிக்கையே நம்பிக்கைன்னு பிளிரி எல்லாருக்கும் ஒரு வணக்கம் வெச்சுக்கிறான் இந்த வாசுதேவன்.

இவன் கடலூர் மாவாட்டாத்து தலைநகரான கடலூர்லே மாவாட்டுகிறான். வேளா வேளைக்கு புஸ் புஸ் னு காத்தடிச்சுட்டு நானும் வேலை செஞ்சேன்னு பேர் பண்ணிட்டு போகிற புஸ்புஸாலஜிஸ்ட். இவன் வேலையை மதிக்கிற சில ஏமாந்தவங்க தர காசுல வண்டி ஏதோ ஓடுது. இப்படி அப்படி இருக்கணும் என்கிற கற்பனை எல்லாம் பெருசா வளத்துக்காததால நிம்மதியாவே வண்டி ஓடுது.

ஒரு பையர். கல்யாணமாயிடுத்து. மத்த வேதம் கத்துக்காத பசங்களுக்கு கத்துக் கெடுக்க- சீ- கொடுக்கப்போறேன்னு பிடிவாதமா இருக்கார். நெரூர் போகணுமாம். எப்ப எப்படின்னு இன்னும் முடிவாகலை.

ஒரு மனைவி. அட ஏன் சிரிக்கிறீங்க? தானா பிறக்கிற குழந்தைங்கள இவங்க இழுத்து வெளியே போட்டு நல்ல பேர் வாங்கிட்டாங்க.

அவ்ளோதான் என்னப்பத்தி நான் சொல்லிக்க தகிரியம் இருக்கிறது.


மத்தப்படி இந்த ப்ளாக் சமாசாரம் எல்லாம் போன டிசம்பர்லேந்து. தமிழ்ல தட்டச்ச ஓரளவு தெரியும். இநத மாபெரும் ஸ்கில் வீணாப்போகக் கூடாதே என்கிற ஆதங்கத்திலே ப்ளாக் போட்டுடலாம்ன்னு முடிவு பண்ணேன். நல்ல சேதின்னு ஆரம்பிச்சு ஈ ஓட்டிகிட்டு இருக்கேன். கண்ணுல வி. எண்ணை போட்டுகிட்டு தேடினாலும் பல நாட்கள் ஒரு நல்ல சேதியும் கண்ணுல படரதில்லை. இத தமிழ் மக்கள் கண்ணுக்கு கொண்டு போகனுமேன்னு கவலை பட்டுகிட்டு இந்த தமிழ் மண பட்டைய எப்படி கொண்டு வரதுன்னு கேக்க கீதா அக்காவுக்கு ஒரு மயில் தட்டிவிட்டேன்.

அவங்க "என்னப்போய் பெரிய கணினி நிபுணின்னு நினச்சு கேக்கிறயே!” அப்படின்னு பதில் அனுப்பிட்டு உடனயே "அதான் பட்டை இருக்கே! தெரிலியா? பட்டை போட்டு இருக்கியா?" ன்னு உறுமினாங்க. என்டாதுன்னு வலைல போய் பாத்தா இருந்தது. ஒரே ஒரு தலைப்ப பாக்கிறப்ப மட்டுமே அது தெரியும்னு யார் கண்டாங்க? நன்னி ன்னு சொன்னா அது என் காப்பிரைட் ன்னு சண்டைக்கு வந்தாங்க.


யார்ரா இந்தப்பயல் வாலாட்டறானோன்னு உளவுப்படைய ஏவிவிட்டு விவரம் சேகரிச்சுட்டாங்க. ஏதோ அவங்க போதாத காலம் இவன் நல்ல கிழவன்னு தோணிப்போச்சு. பிரெண்டு ஆயிட்டாங்க பாவம்.


அம்பிக்கு வாழ்த்து சொல்லி போஸ்ட் போட்டப்ப லிங்க் அனுப்பி இருந்தாங்க. "அட! நமக்கு இருக்கிற பதிவுல மொக்கை போட வாய்ப்பு இல்லாம கஷ்டப்படறோமே. அதுக்கு ஒரு சான்ஸ் கிடைக்கும் போல இருக்கேன்!" ன்னு இது என்ன கான்செப்ட் ன்னு கேக்கப்போய் 'ஆப்டான்டா ஒரு ஆசாமி" ன்னு சேர்ரீங்களா சொல்லுங்க ன்னாங்க. உங்க போதாத காலம் சரின்னுட்டேன்.


கீ. அக்கா சொன்னபடி டிடி அக்காவுக்கு ஒரு மயில் அனுப்பினேன்.


டிடி அக்கா,
ப்ளாக் யூனியன்லே என்னையும் சேத்துக்கிறீங்களா?
நான் நல்ல பையன்.
அப்படின்னு சிலர் ஒத்துக்கிறாங்க. ;-)
விதி (யாரை விட்டது?) முறைகள் இருந்தா சொல்லுங்க!
திவா



டிடி அக்கா அப்ளிகேஷன் பாரம் எல்லாம் அனுப்பினாங்க. விதிகளுக்கு ஒத்துக்கறியா இல்லையான்னு பயமுறுத்த விதி யாரை விட்டதுன்னு சரின்னேன். அப்புறமா பாத்தா இந்த பயலை சேத்துக்கலாமா வேணாமான்னு ஏலம் போட்டுகிட்டு இருக்காங்க. அட தெரிஞ்சா நாம நாலு ஓட்டு போட்டு இருக்கலாமேன்னு பாத்தா ஆதரவா நாலு பேர் கை தூக்கி இருந்தாங்க. சரி வேணாம்னு விட்டுட்டேன். அந்த நாலு பேருக்கு நன்ஸ். இன்னிக்கு டிடி அக்கா இன்விட் அனுப்ப இதோ மொக்கை எழுதிகிட்டு இருக்கேன்.

அப்பப்ப பாப்போம். ரொம்ப கஷ்டப்படுத்த மாட்டேன், கவலைப்படாதீங்க!

:-))

Thursday, May 15, 2008

திருமண வரவேற்பில் தலைவி????? எஸ்கே எம்மின் சந்தேகம்!



நேத்திக்கு வேதாவின் திருமண வரவேற்பு வைபவத்துக்குப் போவதென முடிவெடுத்து போஸ்டும் போட்டுட்டுக் கிளம்பியும் போயாச்சு. நேற்றுக் காலையில் திராச அவர்கள் தானும் வருவதாய்ச் சொன்னார். ஏற்கெனவே எஸ்கேஎம் தானும் வருவதாய்ச் சொல்லி இருந்தார். ஜி3யும் வரப்போவதாய் ஒற்றர்படை தகவல்கள். புலி வந்தால் வருவேன்னு உறுமிட்டுக் கடைசியில் வரலை. போய்ப் பதுங்கி விட்டது. எஸ்கேஎம் என்னைப் பார்த்தது இல்லை. நான் எஸ்கேஎம்மைப் புகைப்படத்தில் பார்த்திருக்கிறேன். எனினும் அடையாளம் காணவேண்டுமே என, எங்க செல்லை எடுத்துட்டு வரும்படியும், சத்திரத்துக்குள் வந்ததும், தான்கூப்பிடுவதாயும் எஸ்கே எம் சொல்லி இருந்தார். சரினு சொல்லிட்டு, நான் நேத்துக் கிளம்பும்போது வழக்கம்போல் செல்லை வீட்டிலேயே விட்டுட்டு, வில்லிவாக்கம் போக ரெயில் ப்ளாட்பார்முக்குள் நுழைந்ததும், அடடா, செல்லை மறந்துட்டேனே? என்று சொல்ல, ம.பா. உன் வழக்கமே இதான், என் கிட்டே சொல்றதுக்கென்ன என்று கேட்க, குருக்ஷேத்திரம் ஆரம்பிக்க இருவரும், ரெயிலில் ஏறினோம்.

வில்லிவாக்கம் வந்ததும், ஏற்கெனவே வேதா சொல்லி இருந்தபடியால் நான் நேரே போக, வழி கேட்காமல் போறயேன்னு அவர் சொல்ல, மீண்டும் ஒரு கைகலப்பு ஏற்பட்டுப் பின்னர் , நான் சொன்ன வழியிலேயே போய், அங்கே கேட்டுக் கொண்டு சரியாகவே சத்திரம் போய்ச் சேர்ந்தோம். போய் வேதாவைப் பார்த்துவிட்டுப் பேசி, வாழ்த்துச் சொல்லி, அம்பி சரியா இன்னிக்கு சென்னை வரார்ங்கிற அதிமுக்கியமான தகவலையும் கொடுத்துவிட்டு, டிடி அக்கா, சுமதி, அம்பி, கோபிநாத், புலி, மெளலி,ரசிகன் ஸ்ரீதர் (மெளலி, மொய் அனுப்பறேன் கூரியரிலேனு சொல்லிட்டு அனுப்பவே இல்லை, வேதா, கவனிச்சுக்கவும்) எல்லாருடைய வாழ்த்தையும் சுமக்க முடியாமல் சுமந்து போய்ச் சொல்லிவிட்டுப் பின்னர் வந்து உட்கார்ந்தேன். இதுக்கே அலுப்பு. போறாததுக்குப் ப.பு. வேறே. சூடு தாங்கலை. வேர்த்து, விறு விறுத்துப் போய் என்னைப் பார்த்தால் நான் தான் கல்யாணத்துக்கு ஓடி ஆடி வேலை செய்தமாதிரி களைத்துப் போய் உட்கார்ந்தேன். என் பரிதாப நிலையைப் பார்த்துவிட்டு என்னோட ம.பா. கீழே போய் உன் நண்பர்கள் வராங்களானு பார்க்கலாம்னு கீழே அழைத்துப் போனார். அங்கே ஒரு கும்பல் அலை மோதிக் கொண்டிருக்க தெரியாத்தனமாய் அந்தக் கும்பலில் அகப்பட்ட நாங்கள் நீந்திக் கொண்டு போய்ச் சேர்ந்த இடம் டைனிங் ஹால். உடனேயே கைபிடித்து உட்கார்த்தி வைக்கப் பட்டு, சாப்பாடு சாப்பிட வைக்கப் பட்டோம்.

என்ன சாப்பாடா இருந்தாலும் இந்த வெயிலில் என்னத்தைச் சாப்பிடறது? சும்மாதான் நிறையப் பேர் உட்கார்ந்து எழுந்தாங்க. சாப்பாடு கொஞ்சம் வீணாகிவிடுமோ என்ற எண்ணத்தில் எதுவும் போட்டுக் கொள்ளாமல், ரசம், மோர் சாப்பிட்டுவிட்டு எழுந்தோம். ஃப்ரூட் சாலடில் அவர் மூழ்க, நான் தெரியாத் தனமாய் வெற்றிலையைப் போட்டு மெல்ல ஆரம்பித்தால் அது லேசில் உள்ளே போகவில்லை. சரி, மாடியில் போய் உட்கார்ந்து மெல்ல, மெல்ல உள்ளே தள்ளலாம்னு போனால் அதுக்குள்ளே ஒரு பெண்மணி செல்லும் காதுமாய், சத்திரத்தில் அலைமோதுவது தெரிந்தது. உடனேயே எஸ்கே எம்மைப் பெயர் சொல்லிக் கூப்பிட என்னைக் கண்ட அவருக்குக் கொஞ்சம் ஆச்சரியம். என் பெயர் எப்படித் தெரியும்னு கேட்க, அட, என்ன இது? இப்படி அறியாமையில் மூழ்கி இருக்காங்களே, அம்பிக்கு அக்கான்னது சரியாத் தான் இருக்குனு நினைச்சுட்டு, நான் தான், "நான்" என்று சொன்னேனோ இல்லையோ, ஏமாற்றம் முகத்தில் படர, அவநம்பிக்கையுடன், நிஜமா, நீங்க தான் கீதாவா?னு கேட்க, என்னத்தைச் சொல்றது போங்க,அவங்க எதிர்பார்த்த மாதிரி நான் இல்லைனா, நான் தலைவி இல்லைனு ஆயிடுமா என்ன? அம்பியும் இப்படித் தான் ஏமாந்தார். அதே போல் அவங்க அக்காவும் ஏமாந்தாங்க. என்ன செய்ய முடியும்?

இருந்தாலும் அவங்க முழுச் சமாதானம் ஆகவில்லை, பேச்சே கிளம்பவில்லை, சரினு வேதாவைப் பார்க்கக் கூட்டிட்டுப் போனேன். வேதா பலமுறை என்னைப் பார்த்திருக்கிறதாலே, அவங்க கொஞ்சமாவது நிச்சயம் பண்ணிக்கலாமே, நான், நான் தான்னு. மேடையிலே போய் வேதா கிட்டேயும், அவங்க கணவர் கிட்டேயும் பேசிட்டு வந்ததும், வேறு வழியில்லாமல் ஒத்துக்க வேண்டியதாப் போச்சு அவங்களுக்கு. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா நிதானத்துக்கு வந்தாங்க. அதுக்குள்ளே, நம் வலை உலகில் "காப்பி, பேஸ்ட்" என்றால் ஜி3, ஜி3 என்றால் "காப்பி,பேஸ்ட்", என்ற அளவுக்கு அதைப் பிரபலப்படுத்தி இன்றைய நாளில் எதிரணியினர் கூட ஜி3 பண்ணணும்னு சொல்ற அளவுக்கு மாத்திய நம் பெருமைக்குரிய ஜி3 தன் சகோதரியுடன் வந்தார். பரஸ்பர அறிமுகம் செய்துகொண்டிருந்தபோதே திரு திராச அவர்களும் அவசர, அவசரமாய் வந்தார். அதே அவசரத்தோடு வேதாவைப் போய்ப் பார்த்துவிட்டு, அவங்க சாப்பிடப் போக, நாங்க சொல்லிட்டுக் கிளம்பி வந்தோம். அதுக்குள்ளே மணி 8-30 ஆகி இருந்தது. இன்று திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்திருக்கும்.

வேதாவுக்கும், அவள் கணவர் சத்யநாராயணனுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். புதுமணத்தம்பதிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்க அனைவரும் இறைவனைப் பிரார்த்திப்போம்.

அனைவருக்கும் வரவேற்பு!


இன்று நம் இனிய தோழி வேதாவின் திருமண வரவேற்பு வைபவம். வேதாவின் சார்பில் யூனியன் மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன். இன்று வரவேற்பில் கலந்து கொள்வதாய்ச் சொல்லி இருக்கும், நண்பர்களுடன் ஏற்படும் சந்திப்பு, மற்றும் இன்றைய வரவேற்பு பற்றிய தகவல்கள் நாளை பதிவிடப் படலாம். நாளை நடக்கப் போகும் வேதாவின் திருமணத்திற்கு வலை உலக மக்கள் அனைவரும் வந்து சிறப்பிப்பதோடு மணமக்கள் "வேதா-சத்யநாராயணனை" வாழ்த்துமாறும் கேட்டுக் கொள்ளுகின்றேன். மற்றவை நாளை!

புகை நமக்கும் மட்டுமல்ல பகை!





(To read the text part, please click all the images for better clarity)
ஸ்டையிலுக்காகவும், மன அழுத்தத்தை குறைப்பதற்காகவும்(?) தான் புகை பிடிக்கிறோம் என நொண்டி சாக்கு சொல்பவர்கள் இதற்க்கு என்ன பதில் சொல்ல போகிறார்களோ? :(

Wednesday, May 14, 2008

புதுமுகம் அறிமுகம்...

எல்லா மக்களும் நலமா?? நம்முடைய ப்ளாக் யூனியன்ல ஒருத்தர் சேர விரும்புகிறார்.. அவருடைய பெயர் டாக்டர் வாசுதேவன் அவர்கள்.. அவரும் ஒரு ப்ளாகர் தான்.. இவரை எனக்கு அறிமுகபடுத்தியவர் கீதா மேடம். இவருடைய பதிவுகளை எனக்கு அறிமுகபடுத்தியவர் திரு.மௌலி அவர்கள்... இவரை சேர்க்க உங்களுடைய ஆதரவை எதிர்ப்பர்க்கிறேன்... அவருடைய பதிவினை படிக்க இங்கே கிளிக்கவும்... வாசுதேவன்

Tuesday, May 13, 2008

"டாம்" மின் திருமண முதலாண்டு நிறைவுக்கு "ஜெரி"யின் வாழ்த்து!

கண்டதுண்டா? கேட்டதுண்டா இவ்வுலகிலே? இம்மாதிரியான ஒரு அதிசயத்தை? இப்போது இதோ முதல் முதலாய்ப் பாருங்கள். டாம் விரித்த வலையில் சிக்காமல் தப்பித்துக் கொண்டு வரும் ஜெரி டாமை வாழ்த்துகின்றது, அதன் முதலாண்டு திருமண நாளுக்காக.
11-ம் தேதி தான் திருமணநாள்னு நினைச்சு, ஜெரி தொலைபேசியில் வாழ்த்தலாம்னு கூப்பிட்டப்போ டாம் இதோ பார்க்கிறீங்களே, இதே மாதிரிக் குறட்டை விட்டுட்டு இருந்தது. கூப்பிட்டால் உலகமே புரியலை. என்ன, யாரு, எங்கே இருந்துனு ஒரே நடுக்கம். தங்கமணியோன்னு ஒரு பவ்யம் குரலிலே, தங்க மணி இல்லைனு தெரிஞ்சதும் சந்தேகம். வாழ்த்தினப்போ கூட என்ன இது ஜெரியானு ஒரே குழப்பம். ஏதோ உளவு பார்க்கவோனு நினைப்பு. எங்கே தம்பி சமைச்சுப் போட்டு நாம சாப்பிடறோம்கிற உண்மையை ஜெரி போய் வலை உலகுக்கு அறிவிச்சுடுமோனு கவலை.

இதை எல்லாம் போக்கி விட்டு டாம் ஜெரியைத் துரத்தினதை எல்லாம் ஜெரி பெருந்தன்மையாக மன்னித்துவிட்டு, அதன் முதலாம் ஆண்டு திருமணநாளுக்காக வாழ்த்துத் தெரிவிக்கின்றது.
இதோ பாருங்க, வாழ்த்துத் தெரிவிக்கும் ஜெரியை டாம் எப்படிக் கோபத்துடன் முறைக்கின்றது? சண்டை போடுது? இருந்தாலும் பரவாயில்லை, அனைத்து வலை உலக நண்பர்களும் வந்து வாழ்த்துத் தெரிவியுங்கள்.


நாளை முதலாம் ஆண்டு மணநாள் கொண்டாடப் போகும் "அம்பி"க்குத் திருமண நாள் வாழ்த்துகள்.

ஐபில் SMS மோசடி

ஐபில் போட்டியின் போது இடையே வரும் போட்டி மோசடி பத்தி தனது நொந்த அனுபவத்தை ஒரு அன்பர் சொல்கிறார் கேளூங்கள்.

I was very act participant of Life Bana De Contest also I got lucky and got a call from Sony Entertainment for Prize 3 given below. After which I learned some hidden fact regarding this contest.

Prize includes:

1) Bright Home worth Rs. 1 Crore fully funished by Godrej

2) 5 Gift hampers worth Rs.1 Lakh each from Godrej ECON every week.

3) 70 Magic Boxes from Vodafone in every match

Known facts by company or Condition apply:*

All are computer selected.

* Godrej or Vodafone or Sony employee can not apply.


* SMS cost Rs. 3 to Rs. 5


Hidden Facts:


It’s not so easy as given in paper or seen in TV Advertisement.


1) If you get lucky by selected computer. Then you have to go through second round of selection which is selected by contest sponsor people.


2) As common in all contest the prize winner of the contest are far far far and fare relative or some way have link with company sponsoring the contests.


3) If you escape from this all, get ready to pay 40% service tax for the price.


4) Most shocking people should watch out for SMS funda, clearly they will mention MORE you send your reply you have the chance to WIN the prize.
6) Condition apply funda is not made public until you go for claiming the prize. Why…..?


Hat off to people coming with so much hidden facts for contests. End of the day people who get benefited are Sponsors and Telecom Service provider (those getting sms from people and those service sms are people are using).