Showing posts with label தவிர்க்க முடியாத மொக்கை. Show all posts
Showing posts with label தவிர்க்க முடியாத மொக்கை. Show all posts

Monday, November 26, 2007

குருவுக்கு "மிஞ்சிய" சிஷ்யர்கள்!!!!!!!!

நேத்து ஏதோ ஒரு பத்திரிகையில் படிச்ச ஜோக் இது:
ஒருவன்: அதோ, போறான் பாரு, அவன் தான் குருவுக்கு மிஞ்சிய சிஷ்யன்!!!!!
மற்றவன்: அவ்வளவு கெட்டிக்காரனா அவன்?
முதல்வன்: இல்லை, இல்லை, அந்த குருவோட எல்லா சிஷ்யங்களும் ஓடிப் போயிட்டாங்க, "மிஞ்சினது" இவன் ஒருத்தன் தான்!!!!"

இதை படிச்சதும் என்னோட நிலைமை தான் நினைவுக்கு வந்தது. ஆரம்பம் முதலே "அம்பி"சிஷ்யன் கிடையாது. எதிரணியிலே உளவு பார்க்க நியமிச்ச ஒரு ஆள்னு ப்ரூவ் ஆயிருக்கு பலமுறை. என்றாலும் கல்யாணத்துக்கப்புறம் அம்பி சமையல் மட்டுமில்லாமல், இப்போ பாத்திரம் வேறே தேய்க்க வேண்டி இருக்குனு ஒரே அலுப்பு, கடுப்பு! (ஹிஹிஹி, நல்லவேளை, அம்பத்தூர் வரலை, மொய் மிச்சம் ஆச்சு!!!) கைப்புள்ளயோ, என்றால் அதியமான் நெடுமானஞ்சியாக இருந்தவர், இப்போ "தங்கமணிக்கஞ்சி"யாக மாறி, அதிரசப் பாகு சரியா வருமா? இட்லிக்கு உளுந்து போதுமானு கவலையிலே இருக்கார். கார்த்திக், முதல்முதல் எனக்காகப் போஸ்டர் எல்லாம் அடிச்சவர், அசின் விஷயத்திலே அம்பியோட ரகசிய ஒப்பந்தம் போட்டுக் கொண்டதைக் கூட மறந்து மன்னிச்சு, நானும் ஒரு தொண்டனாக ஏற்றுக் கொண்டவர், இப்போ என்ன ஆச்சுனு தெரியலை! ஆளே இருக்கிற இடம் தெரியலை!!

மணிப்ரகாஷ் அம்பி மாதிரித்தான், கல்யாணம் ஆனதும், (க்ர்ர்ர்ர்ர், சொல்லவே இல்லை, போட்ட மெயிலுக்கும் பதில் இல்லை) தங்கமணிக்கஞ்சியாக மாறி இப்போ என்னோட வலைப்பக்கம் வரதே இல்லை. எப்போவாவது, யூனியன் மூலமா ஏதோ மெசேஜ் கொடுத்துட்டு அமுக்கமா இருந்துடறார். மணிப்பயல், நாம தமிழ் சொல்லிக் கொடுத்தோமேனு, நன்றி உணர்வோட இருந்தாலும், அப்போ அப்போ அவரோட பங்கு உணர்ச்சி வெள்ளமாய்ப் பீறிட்டு வந்துடுது. பத்தாதுக்கு, இப்போ புதுசா ஒரு பெண்பார்க்கும் படலம் வேறே!!!!!! சரி, அபி அப்பாவாவது மிஞ்சுவார்னு பார்த்தால், அவர் என்னமோ இப்போத் தான் கமல் புதுசா படங்களிலே லாஜிக் இல்லாமல் எடுக்கறாப்பலயும், அதை இவர்தான் முதன் முதல் கண்டு பிடிச்சாப்பலேயும், எழுத்துப் பிழையோட எழுதிட்டு இருக்கார். சாட்டிங்கிலே கூட தப்புத் தப்பாத் தான் எழுதுவேன்னு ஒரே அடம்!!!! இப்போக் கொஞ்ச நாளாத் தலை மறைவு!!!!

சரி, ரசிகனாவது ஏதாவது வந்து ஒப்பேத்துவார்னு பார்த்தால், "டீச்சர், டீச்சர்"னு சொல்லியே தப்பா எழுதி மானத்தை வாங்கிட்டு இருக்கார். அதை என்னோட பதிவிலே மட்டும் சொன்னாப் பரவாயில்லை. போகிற இடத்தில் எல்லாம் சொல்லிட்டு இருக்கார். சரி, நம்ம சகோதரிகளாவது தேறுவாங்கனு பார்த்தால், இந்த எஸ்கேஎம், எல்லார் கூடயும் பேசிட்டு இருக்கார், ஆள் என்னனு கூடக் கேட்கிறதில்லை, அதான் போகட்டும், உமாகோபு இருக்காங்களே, முதல்முதல் நம்மையும் ஒரு தலைவியா மதிச்சுச் சொன்னாங்களேன்னு பார்த்து அவங்களை உ.பிச.வா நியமிக்கலாம்னு ஏற்பாடு செய்தால் ஆள் எங்கே இருக்காங்கன்னே தெரியலை. இந்தப் போர்க்கொடி, என்னோட வலைப்பக்கத்திலே கமெண்ட்ஸ் எழுதறதுக்காகவே ப்ளாக் ஆரம்பிச்சவங்கள்ளே ஒருத்தி, என்னமோ பெரிசா அலட்டல், கடையிலே வாங்கி மணையிலே வச்சு தான் தான் செய்ஞ்சதாய் ஒரே பீத்தல் வேறே. மைஃப்ரண்டு, எப்போ வருவாங்கனு சொல்லவே முடியாது. ஜி3, ஜி3 பண்ணறதுக்கே ஒழுங்கா உதவ மாட்டேங்கறாங்க!!!! இந்த சுமதி, "மின்னலாமே, மின்னல்" நான் இருக்கும்போதே டிடியைத் "தலைவி"னு கூப்பிட்டுட்டு, க்ர்ர்ர்ர்ர்ர்..... இருங்க உங்களுக்கு இருக்கு!!!! அப்பாடா!!!!!!! கடைசியிலே மிஞ்சினது வேதா தான். ஹிஹிஹி, குருவுக்கு "மிஞ்சின" சிஷ்யை வேதா ஒருத்தி தான். அம்பி, படம் எல்லாம் நானே தான் போட்டுக்கறேன். உங்களை மாதிரி தங்கமணி உதவியை நாடறீங்களே டெக்னிகலுக்கு, பதிவு எழுதத் தம்பி உதவியை நாடறீங்களே, அப்படி இல்லை, நானே தான் போட்டுக்கறேன்.