Sunday, November 22, 2009

நாகைப் புலிக்கு கண்ணாலம்

இதுவரை சூடான் காடுகளில் சுதந்திரமாக சுற்றித் திரிந்த நமது நாகை புலியை, சர்க்கஸ் புலியாக மாற்றி கூண்டில் அடைக்க முடிவு பண்ணி தகுந்த ரிங்க் மாஸ்டருக்காக சுற்றமும் நட்பும் வலையை விரித்து வைத்திருந்தனர். நமது புலியும் அப்பாவித்தனமாய் மாட்டிக் கொண்டது என ஏற்கனவே வலையில் விழுந்த நான் மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்.

கும்மி அடிக்க வேண்டிய இடம்: லலிதா திருமண மகால், நாகப்படினம்,
நாள்: 28, 29 நவம்பர் 2009

மேலும் பல தகவல்களுக்கு இங்கு சொடுக்கவும்.

ஏற்கனவே ஏதோ சொல்கிறேன் என சொல்லி வந்த நம் புலி, இனி என்னத்த சொல்வேன்? என்றோ ஒன்னும் சொல்றதுகில்லை என்றோ தனது வலைப்பூ பெயரை மாத்த போவதாக உறுதி செய்யா தகவல்கள் தெரிவிக்கிறது.

இனி நமது புலி சலாம் போடலாம், கரணம் கூட அடிக்கலாம், எல்லாம் ரிங்க் மாஸ்டரின் சாட்டை சுழற்றும் திறமையில் தான் இருக்கிறது. நமது பிளாக் யூனியன் மக்கள் அணி திரண்டு புலியை வாழ்த்த வேண்டுகிறேன்.